Thursday, June 12, 2008

இஸ்லாமிய போதனைகள் - 2. மனிதன் யார்?


மனிதன் யார்? அவனது தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?


இறைவனின் அழகிய படைப்பு:

"திண்ணமாக நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம். .. நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம்" (திருக்குர்ஆன் 95:4, 17:70)


இறைவனின் உயிர்க்காற்று ஊதப் பட்டவன்:

(இறைவனின் சிறப்புத் தன்மைகளை பிரதிபலிப்பவன்) (திருக்குர்ஆன் 15:29)


பிறப்பில் பாவமற்றவன்:

"எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளராவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்." (திருக்குர்ஆன் 6:164)


பிறப்பில் சமமானவன்:

"மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் 4:1)


"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்" (திருக்குர்ஆன் 49:13)


அகிலம் அனைத்தும் மனிதனுக்காகவே:

"இறைவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப் படுத்தி வைத்துள்ளான்" (திருக்குர்ஆன் 2:29, 16:12)


இறைவனின் பிரதிநிதி:

(இறைவனின் கட்டளைகளை ஏற்று செயல்படுபவன்): "உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக ஆக்கியவன் அவனே" (திருக்குர்ஆன் 6:165)


0 comments: